350 கோடி ரூபாய் செலவில் பாலியாறு நீா்த்தேக்கம், வடமாகாண மக்களுக்கு இன்ப அதிா்ச்சி..

ஆசிரியர் - Editor I
350 கோடி ரூபாய் செலவில் பாலியாறு நீா்த்தேக்கம், வடமாகாண மக்களுக்கு இன்ப அதிா்ச்சி..

யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாண மக்களின் குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்யு ம் வகையில் பிரமாண்டமான முறையில் பாலியாறு நீா்த்தேக்கத்தை உருவாக்கவுள்ள தாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம், மீள்குடியேற்றம், புனாழ்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது. 

வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்க ள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்க ள். இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமா னதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக 

அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீரை திசைத்திருப்பும் திட்டம் அமுலாக்கப்ப டவுள்ளது. எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை, கீழ் பாலியாறு நீர்த் தேக்கத்தில் சேமித்து வைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் வவுனிக்குளம், கொள்ளவிளான்குளம், அடம்பன்குளம், மல்லாவிக்குளம் போன்றவை சார்ந்த பிரதேசங்கள் அனுகூலம் பெறும் எனவும் இந்தத் திட்டத்திற்கான செலவினம் 350 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு மேலும் கூறியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு