வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் மீட்பு..

வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை பனிக்கையடியில் குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இப் பாதை வழியாக சென்றவர்கள் அனாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்ட போது அதற்குள் துருப்பிடித்த பழமையான நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும்  கிறிணைட் என்பன காணப்பட்டது.

இதனையடுத்து பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு