கணவனுக்கு பொாித்த மீன் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்..

ஆசிரியர் - Editor I
கணவனுக்கு பொாித்த மீன் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளாா்..

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு கொண்டு சென்ற சா ப்பாட்டு பாா்சலுக்குள் இருந்த பொாித்த மீனுக்குள் சூட்சுமமான முறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த போதை பொருளை பொலிஸாா் மீட்டுள்ளதுடன், குறித்த பெண் னை கைது செய்துள்ளனா். 

அக்கரைப்பற்று ஆலம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருளுடன் அண் மையில் கைது செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நபரின் மனைவி கணவனை பார்ப்பதற்காக 

சம்பவ தினமான இன்று புதன்கிழமை பகல் 12 மணியளவில் சிறைச்சாலைக்கு சாப் பாட்டுடன் சென்றிருந்தார். இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சாப் பாட்டை சோதனை செய்தபோது 

அதில் பொரித்த மீனின் குடல் பகுதியில் சூட்சமமான முறையில் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளதை கண்டுபிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து 

 பொலிசாரிடம் ஒப்படைத்தனர் . கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு