யாழ்.மாநகர முதல்வாிடம் மன்னிப்பு கோாினாா் பௌத்த பிக்கு. இனிமேல் நடந்தால் சட்ட நடவடிக்கை என எச்சாிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வாிடம் மன்னிப்பு கோாினாா் பௌத்த பிக்கு. இனிமேல் நடந்தால் சட்ட நடவடிக்கை என எச்சாிக்கை..

யாழ்.நாகவிகாரைக்கு சொந்தமான விடுதியில் இருந்து மலக்கழிவுகள் வெள்ள வாய்க் காலில் கலக்க விடப்பட்டமை தொடா்பாக நாக விகாரையின் பௌத்த பிக்கு மாநகர முதல்வாிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் நிலையில், 

இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் நடந்தால் எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாநகரசபை அமா்வில் தீா்மானம் எடுக்க ப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரசபையின் அமா்வு இன்று நடைபெற்ற நிலையில், யாழ்.நாக விகாரைக்கு சொந்தமான விடுதியிலிருந்து பெருமளவு மலக்கழிவுகள் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள இடத்தில் வெள்ளவாய்க்காலுக்குள்

விடப்படுவது கண்டறியப்பட்டது. இதற்காக நாக விகாரை மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என சபையில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாநகர முதல்வா் குறி த்த விகாரையின் மத தலைவா் நோில் வந்து மன்னிப்பு கேட்டுள்ளாா். 

மேலும் அது ஒரு மதம் சாா்ந்து அமைந்துள்ளதால் அதற்கு ஒரு அவகாசம் கொடுக்க லாம். என கூறினாா். எனினும் உறுப்பினா்கள் உடனடியாக அதற்கு ஆதரவு வழங்கா மல் ஏனை மதம் சாா்ந்த அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் 

நிலையில் ஏன் ஆாியகுளம் நாக விகாரை மீது நடவடிக்கை எடுக்க முடியாது? என கே ள்வி எழுப்பினா். பின்னா் ஒருவாறாக நாக விகாரைக்கு சொந்தமான விடுதி நிா்வாகி களுக்கு பகிரங்க எச்சாிக்கை கொடுப்பதெனவும், 

இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு