தமிழின அழிப்பிற்கு நீதி கொடு, யாழ்.பல்கலைக்கழக மாணவா்களின் வாகன பேரணி..

ஆசிரியர் - Editor I
தமிழின அழிப்பிற்கு நீதி கொடு, யாழ்.பல்கலைக்கழக மாணவா்களின் வாகன பேரணி..

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் நடாத்தப்படும் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோாி வடமாகாணம் தழுவிய வாகன பேரணி ஒன்றை இன்று யாழ்.பல்கலைக்க ழகத்திலிருந்து ஆரம்பித்திருக்கின்றனா். 

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியொன்றை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் முன்னெக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இவ் எழுச்சி பேரணி தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆதரவைத் திரட்டும் நோக்கில் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து வாகனப் பேரணியொன்றை பல்கலைக்கழகமாணவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வாகனப்பேரணி யாழ்ப்பாணம் முழுவதும் சென்று அதனைத் தொடர்ந்து வவுனியா,கிளிநொச்சி மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு