தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும்!- சிறிகாந்தா

ஆசிரியர் - Admin
தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும்!- சிறிகாந்தா

தடுமாறிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கூட்டமைப்பாகவே தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் பார்க்கின்றனர். 

இந்தப் பயணத்தில் தொடர்ந்தும் நாங்கள் பயணிக்க முடியாது. எனவே கூட்டமைப்பு பயணிக்கின்ற பாதை சரி செய்யப்பட வேண்டும் என்று தாம் கோருவதாக ரெலோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

“சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் பௌத்த சிங்கள ஆதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடத் தயாரில்லை என்றால் நாங்கள் மீண்டும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலே சுதந்திரத் தனித் தமிழீழக் கோரிக்கையை கையிலெடுப்பது பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டி வரும். அதனை நாங்களோ எமது மக்களோ இப்போது சிந்திக்கா விட்டாலும் அதிகார அரசியல் வெறி கொண்டு அலைகின்ற பௌத்த சிங்களப் பேரினவாதிகளும் தலைவர்களும் அதைத் தீர்மானிப்பார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு