யாழ். கொக்குவிலில் இளைஞன் கைது: காரணம் இதுதான்!
யாழ்.கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல்(22)யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் வாள்களுடன் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று வன்முறையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.