யாழ்.சுன்னாகத்தில் ரயிலுடன் மோதி குடும்பஸ்த்தர் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகத்தில் ரயிலுடன் மோதி குடும்பஸ்த்தர் பலி!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் ரயிலுடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் - மயிலனி பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றபோது, சுன்னாகம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளை ரயில் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு