SuperTopAds

சிறுவர்கள் துஸ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
சிறுவர்கள் துஸ்பிரயோகம் - விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விளையாட்டு உத்தியோத்தர் நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு உத்தியோத்தர் மீது கிளிநொச்சி பொலிஸார் சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 முறைப்பாடுகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் நான்கு முறைப் பாடுகள் விளையாட்டு உத்தியோகத்தர் மாணவர்களுக்கு தாக்கியமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது

இதனால் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.