SuperTopAds

யாழில் தொடரும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor II
யாழில் தொடரும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும்  தனியார்  பேருந்து சங்கத்துக்கும்  இடையில் யாழில் தொடரும்  பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் வகையில்  போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலையே அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பேருந்து  தரிப்பிடங்கள் நான்கு  உள்ளன. வழமையான   நகர்ப் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் , புதிதாகக் கட்டப்பட்ட தரிப்பிடம், முனியப்பர் கோவிலடி மற்றும் பொதுவெளி மைதானம் என நான்கு இடங்கள் உள்ளன. 

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கும்  தனியார் பேருந்து சங்கத்திற்கும்  இடையில் முரண்பாடுகள் உள்ளன.ஆனால் இதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. ரயில் நிலையத்திற்குப் பின்னேயும் இலங்கைப் போக்குவரத்துச சபைக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் பேருந்து நிலையமும் கட்டப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரைக்கும் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் காணப்படுகின்றது. அதற்கென்று ஒரு குழு அமைத்து அதை ஒரு  சுழற்சிமுறை  வழியில் ஒழுங்குபடுத்தினால் சிறந்தது. ஒரு தரிப்பிடம் அமைத்து பஸ்கள் எல்லாம் வந்து அங்கு நிறுத்தி விட்டு செல்வது போன்றதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

நகர் மத்தியில் பேருந்து போக்குவரத்தால் போதனா வைத்தியசாலைக்குச் செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதுமட்டுமன்றி வீதியால் பயணிக்கும் மக்களுக்கும் சிரமம் ஏற்படுகின்றது. 

இந்தப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு தான் எதிர்வரும் 8 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க  யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். 

அதன்போது அனைத்து அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் பேருந்து சங்கத்துக்கும்  இடையேயுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான முடிவு எடுக்கப்படும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.