வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்

ஆசிரியர் - Admin
வயோதிபத் தம்பதியை தாக்கி விட்டு நகைகள், கொள்ளை! - ஊரெழுவில் சம்பவம்

ஊரெழு அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கி படுகாயப்படுத்தி விட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

"ஊரெழு அம்மன் கோவிலடியில் 77 வயதுடைய வயோதிபரும் 70 வயதுடைய அவரது துணைவியாரும் வசித்து வருகின்றனர். அவர்களின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.

கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் தம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொள்ளையர்களின் தாக்குதலால் காயடைந்த வயோதிபத் தம்பதியர், தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு