கலைஞர் கருணாநிதி மறைவையிட்டு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
கலைஞர் கருணாநிதி மறைவையிட்டு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி காலமான தை தொடர்ந்து தமிழகத்தில் நாளை புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 7 நாட்க ள் துக்கதினமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி உடல்நல குறைவு காரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை 6.10 மணிய ளவில் காலமானார்.

இதனை தொடர்ந்து நாளை புதன் கிழமையை அரசு விடுமுறையாக அறிவித்துள்ள தமிழக அரசு 7 நாட் கள் துக்கதினமாகவும் அறிவித்துள்ளது. 

மேலும் கருணாநிதியின்  உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதுடன்  இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு