போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

ஆசிரியர் - Admin
போதையில் மயங்கிக் கிடந்த மணமகன்! - யாழ்ப்பாணத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்

திருமண நாளன்று மணமகன்  குடிபோதையில் மயங்கிக் கிடந்ததால், திருமணத்தை  மணப்பெண் நிறுத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் 20-ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், மன்னாரை சேர்ந்த ஆணுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமணம் யாழ்ப்பாணத்திலுள்ள பெண் வீட்டில் இடம்பெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை யாழ். நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். திட்டமிட்டபடி 20-ம் திகதி காலை குறித்த பெண் திருமணத்துக்கு தாயாராகியிருந்த நிலையில், வெகு நேரமாகியும் மாப்பிள்ளை திருமணத்துக்கு வரவில்லை, தொலைபேசி அழைப்புக்கும் பதிலில்லை, என்ன நடந்திருக்குமோ என்ற பதற்றத்தில் பெண்ணின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்த பொழுது அவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

மாப்பிள்ளை மது போதையில் மயங்கிக் கிடந்தார், எழுப்பியும் எழும்பவில்லை, வேறுவழியின்றி மீண்டும் பெண் வீட்டுக்கு சென்ற உறவினர்கள் நடந்த சம்பவத்தை பெண்ணுக்கும், பெண் வீட்டாருக்கும் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் சிறிது நேரத்தின் பின் திருமணத்தை நிறுத்துமாறு பெற்றோரிடம் கூற பெண்ணின் விருப்பப்படி திருமணம் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் திருமணத்துக்கு சென்ற உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு