இலக்கத்தகடு மறைத்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கைது – கோப்பாயைச் சேர்ந்தவராம்!
கொக்குவில் பகுதியில் இலக்கத் தகடுகளை துணியால் மூடிக் கட்டி மறைத்த நிலையில் சென்ற சமயம் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டுத் தப்பியோடிய கோப்பாயை சேர்ந்த உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கொக்குவில் பகுதியில் கிராம சேவகரின் அலுவலகம் மற்றும் ஓர் இல்லம் என்பனவற்றில் கோரத் தாண்டவம் ஆடிய பின்பு தப்பிச் சென்ற குழுவினர் வீதி விபத்திற்கு உள்ளாகி ஓர் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். அவ்வாறு வாள் வெட்டுக் குழுவினர் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிளை பொலிசார் மீட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட VY- 9710 இலக்க மோட்டார் சைக்கிள் வவுனியாவில் கொள்வனவு செய்யப்பட்ட கோப்பாயை சேர்ந்த ஓர் இளைஞரே அதன் உரிமையாளராக காணப்பட்ட நிலையில் அதன் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதே நேரம் குறித்த சம்பவத்தில் 4ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் 9 பேர் பயணித்தே கிராம சேவகர் அலுவலகம் மற்றும் ஓர் இல்லம் ஆகியவற்றுடன் ஓர் கயஸ் வண்டியினையும் பெரும் சேதம் விளைவித்ததோடு ஆபத்தான ஆயுதங்கள் சகிதம் வீதிகளில் நடமாடியமையும் குறிப்பிடத்தக்கது.