யாழ்.மாவட்டம் முழுவதும் கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு

ஆசிரியர் - Admin
யாழ்.மாவட்டம் முழுவதும் கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு

யாழ். வண்ணார்பண்ணையில் கிராம அலுவலர் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் கிராம அலுவலகம் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் யாழ்.மாவட்டம் தழுவிய ரீதியில் கிராம அலுவலர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை(02) ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாநகர சபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை ஜே -100 கிராம அலுவலகர் அலுவலகத்துக்குள் கூரிய வாள்கள், ஆயுதங்களுடன் உட்புகுந்த இனம் தெரியாத குழு கிராம அலுவலரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியதுடன் கிராம அலுவலகத்துக்குள்ளிருந்த சொத்துக்களை அடித்து நொறுக்கிப் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தே இன்றைய தினம் யாழ். மாவட்டக் கிராம அலுவலர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கிராம அலுவலர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக யாழ்.மாவட்டம் முழுவதுமுள்ள கிராம அலுவலர் அலுவலகங்கள் இன்றைய தினம் இழுத்து மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு