யாழ். சாவகச்சேரி பகுதியில் பற்றைக்குள் அநாதரவாக இருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகள்
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் பற்றைக்குள் அநாதரவாக இருந்த இரண்டு துவிச்சக்கர வண்டிகள் நேற்று நள்ளிரவு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி செருக்கல் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பற்றைக்காணிக்குள் ஆண் ஒருவருடையதும் பெண் ஒருவருடையதும் துவிச்சக்கர வண்டிகள் இரண்டு நாட்களாக அநாதரவான நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டதோடு இரண்டு துவிச்சக்கர வண்டிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.