யாழ். வன்முறைகளுடன் இராணுவத்தினருக்குத் தொடர்பா?

ஆசிரியர் - Admin
யாழ். வன்முறைகளுடன் இராணுவத்தினருக்குத் தொடர்பா?

யாழ். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையுமில்லை எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராய்ச்சி இவ்வாறான வன்முறைகளுக்கும், இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை எனவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கும், இராணுவத்தினருக்குமிடையில் தொடர்பிருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுடன் இராணுவத்தினருக்குத் தொடர்பிருக்கின்றதென உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராய்ச்சி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு