சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசம் செய்த ஐவர் கைது!

ஆசிரியர் - Admin
சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசம் செய்த ஐவர் கைது!

சண்­டி­லிப்­பா­யில் வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்ட குழு­வி­ன­ரில் நால்­வர் நேற்றுக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 19, 21, 22,24 வய­துடைய வர்கள், உடு­வில் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள்.

சண்­டி­லிப்­பாய்ப் பகு­தி­யில் வாள்­க­ளு­டன் இனந்­தெ­ர­யாத நபர்­கள் பெரும் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர். இளை­ஞர்­களை மடக்கி மிரட்­டி­னர், முகத்தை மூடி துணி­கட்டி வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சம் செய்த அவர்­களை கண்டு வாக­னங்­களை விட்­டு­விட்டு இளை­ஞர்­கள் சிதறி ஓடி­னர். அந்த வாக­னங்­ளைக் கடு­மை­யா­கச் சேதப்­ப­டுத்­திய அந்­தக் கும்­பல் ஒரு­வ­ரு­டைய மோட்­டார் சைக்­கி­ளை­யும் பறித்­துச் சென்­றது.

இத­னால் அந்­தப் பிர­தே­சமே சிறிது நேரம் பதற்­றக்­க­ள­மா­க­வி­ருந்­தது. இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று தெரி­வித்தே குறித்த நால்­வ­ரும் கைது செய்­யப்­பட்டனர்.

இந்த நிலையில் உடுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய மற்றொரு சந்தேகநபரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு