சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசம் செய்த ஐவர் கைது!
சண்டிலிப்பாயில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுவினரில் நால்வர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 19, 21, 22,24 வயதுடைய வர்கள், உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சண்டிலிப்பாய்ப் பகுதியில் வாள்களுடன் இனந்தெரயாத நபர்கள் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களை மடக்கி மிரட்டினர், முகத்தை மூடி துணிகட்டி வாள்களுடன் அட்டகாசம் செய்த அவர்களை கண்டு வாகனங்களை விட்டுவிட்டு இளைஞர்கள் சிதறி ஓடினர். அந்த வாகனங்ளைக் கடுமையாகச் சேதப்படுத்திய அந்தக் கும்பல் ஒருவருடைய மோட்டார் சைக்கிளையும் பறித்துச் சென்றது.
இதனால் அந்தப் பிரதேசமே சிறிது நேரம் பதற்றக்களமாகவிருந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்தே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உடுவிலைச் சேர்ந்த 29 வயதுடைய மற்றொரு சந்தேகநபரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.