அச்சத்தில் உறையும் அராலி மக்கள். யார் அந்த மர்ம நபர்கள்..? VIDEO

ஆசிரியர் - Editor I
அச்சத்தில் உறையும் அராலி மக்கள். யார் அந்த மர்ம நபர்கள்..? VIDEO

யாழ்.அராலி பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் குடிமனைகளுக்குள் நடமாடும் மர்மநபர்களால் தமது இயல்பு வாழ்க்கை பா திக்கப்பட்டுள்ளதாக கூறும் மக்கள் பொறு ப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடு க்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று அராலி ப குதி மக்கள் மேலும் கூறுகையில், 

வலி,மேற்கு பிரதேசசபை தலைவர் த.நடனேந்திரன்..

அராலி பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். கறுப்பு நிறத்தில் உடைகளை அணிந்திரு ப்பதுடன் முகத்திற்கும் கறுப்பு நிற சாயம் பூசியிருக்கின்றார்கள்.

இவர்கள் மக்களை தாக்குவதில்லை. கள வு எடுப்பதில்லை. ஆனால் மக்களுடைய வீடுகள் மீது கல் வீசுவதுடன், மக்களை அ ச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார் கள். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப் பினர் ஈ.சரவணபவன்

நேரில் வந்து பார்வையிட்டிருந்தார். எனினு  ம் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறைய வில்லை. எனவே பொறுப்புவாய்ந்தவர்கள் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

அராலி மக்கள் கூறுகையில்..

இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் இவ்வாறான மர்ம நபர்களுடை ய நடமாட்டம் நடக்கிறது. வாகன சத்தம் கேட்கிறது. அதன் பின் கறுப்பு உடையணி ந்த முகத்திற்கு கறுப்பு சாயம் பூசியவர்கள் நடமாடுகிறார்கள்.

மக்கள் துரத்தி சென்றால் மதில் மற்றும் வேலியை ஒரே தடவையில் பாய்கிறார்கள். அவர்கள் குள்ளமானவர்களாக இருக்கிறா ர்கள். இதனால் இரவு நேரங்களில் தூங்கா மல் விழித்திருக்கவேண்டியுள்ளது.

இரவு நேரங்களில் விழித்திருப்பதனால் பகலில் வேலைக்கு செல்ல இயலாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம். குள்ள மனி தர்களை பிடிப்பதற்கு நாங்கள் வீதியில் நின்றால் உடனேயே பொலிஸார் சம்பவ இ டத்திற்கு வருகிறார்கள்.

வந்தவர்கள் எங்களை வீதியில் நிற்கவே ண்டாம் என அச்சுறுத்துகிறார்கள். இந்த மர்ம நபர்களுடைய நடமாட்டத்தினால் நா ம் அச்சத்துடன் வாழ்கிறோம். பொறுப்பு வாய்ந்தவர்கள் இது தொடர்பாக உடனடி யாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு