இன்று யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்தடை!

ஆசிரியர் - Admin
இன்று யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) மின்சாரம் தடைப்பட்ட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை- 08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.குடாநாட்டின் குளப்பிட்டி ஆனைக்கோட்டை வீதி, வராகி கோவிலடி, சாவற்கட்டு, ஆனைக்கோட்டைச் சந்தி, காக்கைதீவு, ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை பி.சி, கூளாவடி, ஆனைக்கோட்டை நவாலி வீதி, மூத்த விநாயகர் கோவிலடி, நவாலி. சென்பீற்றர்ஸ் தேவாலயம், கலையரசி வீதி, அரசடி, வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, கொத்துக்கட்டி, வதிரி, சக்களாவத்தை, துலாக்கட்டு, அல்வாய், திக்கம், இரும்புமதவடி, வேம்பிராய், கலவையல் , மட்டுவிலின் ஒரு பகுதி, குருநகர், பழைய பூங்கா வீதியின் ஒருபகுதி, பாசையூர், கொழும்புத்துறை வீதியின் ஒருபகுதி, இலந்தைக்குளம் வீதி, புங்கன்குளம் வீதி, சந்தனமாதா கோவில் வீதி, வலன்புரம், துண்டி, நெடுங்குளம், மணியந்தோட்டம், கெலன் தோட்டம், பெரியதோட்டம், உதயபுரம், குருசோ வீதி, அச்சுக்கூட வீதி, பிரதான வீதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமுலிலிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு