பாதுகாப்பு அமைச்சிடம் துப்பாக்கி கோரிய அனந்தியிடம் கடிதம் அம்பலம்! PHOTOS
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தனிப்பட்ட பாதுகாப்புக்கு துப்பாக்கி தருமாறு கோரி பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த கடிதம் வெளியாகியுள்ளது.
வடமாகாண சபையின் 127வது விசேட அமர்வின் போது, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்று ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் அயூப், குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். எனினும், அமைச்சர் அனந்தி சசிதரன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததுடன், அந்த விடயம் தொடர்பாக தன்னிலை விளக்கம் ஒன்றையும் நேற்றைய தினம் மாகாண சபை அமர்வின்போது வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு அனந்தி சசிதரன் விண்ணப்பித்துள்ள கோரிக்கை கடிதம் , ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர்து. தனது பாதுகாப்பு தொடர்பில் யாரிடமும் கைத்துப்பாக்கி பெற்றுக்கொள்ளவில்லை என அனந்தி சசிதரன் மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் குறித்த கோரிக்கை கடிதம் வெளியாகியுள்ளது.