கொடிகாமம் பிரதான வீதியில் இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதி விபத்தில் காயமுற்றவர் மரணம்!

ஆசிரியர் - Admin
கொடிகாமம் பிரதான வீதியில் இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதி விபத்தில் காயமுற்றவர் மரணம்!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் ஓட்டோ மோதியதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பயனின்றி மரணமானார். கடந்த திங்கட்கிழமை இரவு கொடிகாமம் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படையினரின் வாகனத்துடன் 3 பயணிகளுடன் வந்த ஓட்டோ மோதியது.

அதில் பயணித்த வட்டுக்கோட்டை அராலி தெற்கைச் சேர்ந்த நாகமுத்து பத்மநாதன் ( வயது 67 ) என்பவர் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பயனின்றி மரணமானார். முதியவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் ஓட்டோ சாரதி மற்றும் படையினரின் வாகனச் சாரதி ஆகியோரை நேற்று நீதிமன்றில் முற்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு