யாழில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய ஆசிரியர்: பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

ஆசிரியர் - Admin
யாழில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய ஆசிரியர்: பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

யாழ்.வட்டுக் கோட்டையில் தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் வட்டுக் கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியல் மல்லாகம் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்றைய தினம்(24) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் சார்பில் மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா மன்றில் முன்னிலையாகி ஆசிரியருக்குப் பிணை கோரி விண்ணப்பம் செய்தார்.

எனினும்,பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது மக்கள் விரக்தி நிலையிலுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர் ஆசிரியருக்குப் பிணை வழங்கப்பட்டால் வழக்கில் தொய்வு நிலை ஏற்படுமெனவும் சுட்டிக் காட்டினார்.

இதனையடுத்து மூத்த சட்டத்தரணி சிறீகாந்தாவின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த நீதவான் குறித்த ஆசிரியரை அடுத்தமாதம்-07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு