முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக திருமதி. நர்மதா விஜயகாந்

ஆசிரியர் - Admin
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக திருமதி. நர்மதா விஜயகாந்

கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த திரு.விஜயகாந் அவர்களுக்கு அண்மையில் யாழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்நிலையில் யாழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து யாழ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதால் அவரின் பிணைக்கான சீராய்வு மனுவும் அதே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வரும் இந்நிலையில்

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக கட்சியின் ஆட்சி மன்றக்குழு 19.07.2018ம் திகதி கட்சியின் தலைவர் திரு.மருசலீன் அன்ரனி அவர்களின் தலைமையில் கூடி தற்போதைய கட்சியின் செயற்பாடு சம்பந்தமாகவும் எதிர்கால கட்சியின் செயற்பாடு சம்பந்தமாகவும் ஆராயப்பட்டதுடன் கட்சியின் செயலாளர் தற்போது செயற்பட முடியாமல் இருப்பதால் மக்களின் சேவைக்கு தற்காலிகமாக பொதுச்செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதன் பிரகாரம் திருமதி.நர்மதா விஜயகாந் அவர்களை தற்காலிக பொதுச்செயலாளராக கடமையாற்றுவதற்கும் வங்கி மற்றும் ஏனைய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கும் முடிவெடுக்கப்பட்டதுடன் 

பொதுச்செயலாளராக இருந்து நடந்து முடிந்த யாழ் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாநகரசபை வட்டாரம் 22ல் வெற்றி பெற்ற யாழ் மாநகரசபை உறுப்பினர் பதவிக்கு திருமதி நர்மதா விஜயகாந் அவர்களை சிபார்சு செய்வதாகவும் முடிவெடுக்கபட்டதுடன் அதனை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு