ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் விஜயகலாவுக்கு முக்கியத்துவம்!

ஆசிரியர் - Admin
ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் விஜயகலாவுக்கு முக்கியத்துவம்!

விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, பிரதமர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது.

விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்­சை­க­ளுக்­குள் சிக்கி, ஐக்­கிய தேசி­யக் கட்­சித் தலை­மை­யி­னா­லேயே பதவி பிடுங்­கப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு, பிரதமர் வடக்­கில் நேற்­றுப் பங்­கேற்ற நிகழ்­வு­க­ளில் முதன்மை ஆச­னம் வழங்­கப்­பட்­டது. 

உள்­நாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் மற்­றும் வெளிவிவகார அமைச்­சர் உள்­ளிட்­டோர் யாழ்ப்­பா­ணத்­தில் பங்­கேற்ற நிகழ்­வில் உரை­யாற்­றிய விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சாரப்­பட கருத்­துத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­தக் கருத்து தெற்­கில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைப்­பீ­டம், அவ­ரது இரா­ஜாங்க அமைச்­சர் பத­வி­யைப் பறித்­தது. அத்­து­டன் அவ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­க­ளும் முடுக்கி விடப்­பட்­டுள்­ளது. தற்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மாத்­தி­ரமே அவர் பதவி வகிக்­கின்­றார்.

பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கில் நேற்­றுப் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­றார். அமைச்­சர்­க­ளுக்கு இணை­யாக, ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இல்­லாத சிறப்­பு­ரி­மை­யாக, முன்­வ­ரிசை ஆச­னம், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு வழங்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு