ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் விஜயகலாவுக்கு முக்கியத்துவம்!
விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்சைகளுக்குள் சிக்கி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையினாலேயே பதவி பிடுங்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பிரதமர் வடக்கில் நேற்றுப் பங்கேற்ற நிகழ்வுகளில் முதன்மை ஆசனம் வழங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் பற்றி கருத்து வெளியிட்டு, சர்ச்சைகளுக்குள் சிக்கி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையினாலேயே பதவி பிடுங்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பிரதமர் வடக்கில் நேற்றுப் பங்கேற்ற நிகழ்வுகளில் முதன்மை ஆசனம் வழங்கப்பட்டது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோர் யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்று சாரப்பட கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து தெற்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம், அவரது இராஜாங்க அமைச்சர் பதவியைப் பறித்தது. அத்துடன் அவருக்கு எதிரான விசாரணைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரமே அவர் பதவி வகிக்கின்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் நேற்றுப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அமைச்சர்களுக்கு இணையாக, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத சிறப்புரிமையாக, முன்வரிசை ஆசனம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது.