பிரான்சில் இருந்து மானிப்பாய் வந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள தனது தாயாரின் வீட்டுக்கு வந்தவர், நேற்றுத் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த ஜோசெப் அருள்தாஸ் (வயது-–38) என்பவரே உயிரிழந்தவராவார். சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்தவர், தனது தாயாரின் வீட்டில் தங்கியுள்ளார்.
வீட்டில் நேற்றுத் தேநீர் குடித்து விட்டு இருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் மரணமானார்.