கொடிகாமத்தில் இளைஞனுக்கு வாள்வெட்டு! - வீடு புகுந்து தாக்குதல்

ஆசிரியர் - Admin
கொடிகாமத்தில் இளைஞனுக்கு வாள்வெட்டு! - வீடு புகுந்து தாக்குதல்

கொடி­கா­மம் பகுதியில் நேற்று இர­வு இனந்­தெ­ரி­யாத நபர்­கள் வீட்­டி­லி­ருந்த இளை­ஞ­னுக்கு வாளால் வெட்­டி­ய­தில் தலை­யில் பலத்த காய­ம­டைந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். கொடி­கா­மம் வெள்­ளம்போக்­க­டிப் பகு­தி­யில் நேற்று இரவு 9 .30 மணி­ய­ள­வில் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

நான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வாள், பொல்­லு­க­ளு­டன் வீட்­டில் நுழைந்து இந்தத் தாக்­கு­தல் மேற்­கொள்ளப்பட்டுள்ளது. வீட்­டி­லி ­ருந்த பெண்­கள் பதறி ஓடவே அங்­கி­ருந்த இளை­ஞன் மீது வாள் வெட்டு இடம்­பெற்­றுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. வீட்­டில் இருந்த பொருள்­க­ளுக்­கும் சேதத்தை ஏற்­ப­டுத்தி, பொருள்­க­ளைப் போட்டு உடைத்த நபர்­கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த விஜி­த­ரன் (வயது– 28) என்­ப­வர் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­க­ப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை சாவ­கச்சேரிப் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு