யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை சனிக்கிழமை (21) காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.மாவட்டத்தில் தாவடி, தாவடி பாடசாலை லேன், பிள்ளையார் கோவிலடி, வன்னியசிங்கம் வீதி,பத்தானை, யுவசக்தி வீதி, அண்ணாமலை வீதி, சுதுமலை, மலை வேம்படி, சின்மய பாரதி பாடசாலை வீதி, மாப்பியன் வீதி, கூளாவடி, கரம்பைக் குறிச்சி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு