மோசமாக நடந்து கொண்ட இளைஞருக்கு மனநல சிகிச்சை வழங்குமாறு உத்தரவு!

ஆசிரியர் - Admin
மோசமாக நடந்து கொண்ட இளைஞருக்கு மனநல சிகிச்சை வழங்குமாறு உத்தரவு!

யாழ். கொடிகாமம் பகுதியில் திடீரென மோசமாக நடந்து கொண்ட இளைஞருக்கு மனநல சிகிச்சை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

25 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவர் திடீரென வீட்டில் காணப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்களையும் தாக்கியுள்ளார். இந்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் இணைந்து குறித்த இளைஞரை பிடித்து கட்டி வைத்துள்ளனர். இதனையடுத்து இளைஞர் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதன்பின் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபரை தெல்லிப்பளை மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு