ஆவா குழுவினருக்கு தமிழ்ப் படங்களே முன்மாதிரி! - நிலைமை ஒன்றும் மோசமில்லை என்கிறார் அமைச்சர்
தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளே ஆவா குழுவினரின் வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார.
யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட காவல்துறை அதிகாரிகள் அங்குள்ள நிலைமை குறித்து எனக்கு எடுத்துரைத்துள்ளனர். தமிழ்த் திரைப்படங்களில் காண்பிக்கப்படும் வன்முறைகளில் பின்பற்றுவதன் மூலம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, ஆவா குழுவினர் கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். ஆவா குழுவினர் வாள்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.
எனினும் ஊடகங்களும் அரசியல் எதிராளிகளும் தெரிவிப்பது போன்று நிலைமை அவ்வளவு மோசமானதாக இல்லை. கடந்த வருடம் மாத்திரம் வடபகுதியில் 3000 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.