தனிக்கட்சியை ஆரம்பிப்பாரா வடக்கு முதலமைச்சர்?: பதில் இதுதான்!

ஆசிரியர் - Admin
தனிக்கட்சியை ஆரம்பிப்பாரா வடக்கு முதலமைச்சர்?: பதில் இதுதான்!

தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம் கூறியுள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக் கினன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் செயலகத்தில் நேற்று(11) சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் குறித்த சந்திப்புத் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் கனேடியத் தூதுவர் என்னிடம் வினவினார்.

அதற்கு நான் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் என்னிடம் கேள்வியெழுப்பிய போது எனது கட்சி என்னை வேட்பாளராக நிற்க வாய்ப்பளிக்காவிடின் வீட்டிற்குச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறியிருந்தேன்.

ஆனால், ஊடகங்கள் நான் கூறிய முதல் இரு விடயங்களையும் விட்டுவிட்டு மூன்றாவதாகத் தெரிவித்த விடயத்தை மட்டும் பெரிதாக வெளியிட்டு விட்டன.

தனிக்கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் நான் முன்னெடுக்கவில்லை என்பதை நான் அவருக்குத் தெரிவித்துள்ளேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு