இலங்கை தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல்!

ஆசிரியர் - Editor I
இலங்கை தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல்!

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை இலங்கை தமிழரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து வேட்பாளர்கள் கையொப்பமிட்டனர்.

பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சி.சிறிதரன் தலைமையிலான வேட்பாளர் அணியினர் வேட்புமனுவை கையளித்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்திற்கு சென்று தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு