28 வருடங்களின் பின்னா் காங்கேசன்துறையில் மக்கள் பயன்பாட்டுக்காக எாிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
28 வருடங்களின் பின்னா் காங்கேசன்துறையில் மக்கள் பயன்பாட்டுக்காக எாிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படுகிறது..

வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறையில் உள்ள தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மீள புனரமைப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலையம் தெல்லிப்பளையில் இல்லாதுள்ளதுடன் காங்கேசன்துறையில் தல்செவன ஹொட்டலுக்கு அண்மையில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் 2016 ஓகஸ்ட் மாதம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்பட்டது. அதன்படி டீசல் தாங்கி மட்டுமே நல்ல நிலையில இருந்தது இதனால் டீசல் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அங்கு தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வரும் மக்கள் பெற்றோலுக்கு மல்லாகம் வரை சென்றே பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையிருந்ததுடன் இங்கு பெற்றோலினை வாங்கி உள் கடைகளில் கூடிய விலைக்கே விற்கப்பட்டுகிறது.. இந்த எரிபொருள் நிலைய புனரமைப்பு குறித்து 

தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் உமாகரன் கருத்து தெரிவிக்கையில் பெற்றோலிய அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தோம் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்துடன் விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் இதன்படி அனுமதிகள் கிடைக்கப்பட்பெற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன.

 4 மாதங்களில் இதனை புனரமைத்து தருவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணை ஆகியவற்றுக்கான எரிபொருள் தாங்கிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன இது புனரமைக்கப்பட்ட பின்னர் வாகனச் சாரதிகள், 

மயிலிட்டி மீன்பிடி தொழிலாளர்கள், மீள்குடியேறிய மக்களுக்கு டீசல், மண்ணெண்ணை , பெற்றோல் ஆகியன விநியோகிக்கப்படும் இதனால் மக்களுக்கு சிரமமின்றி அமையும் என்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு