யாழில் 17 வயதுச் சிறுமிக்கு அயல்வீட்டு நபரால் ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பகுதியில் 17 வயதுச் சிறுமியொருவரை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அயல்வீட்டினைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குறித்த சிறுமி நேற்று முன்தினம் தனித்திருப்பதைத் தெரிந்து கொண்ட அயல்வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தரான 59 வயது நபர் குறித்த சிறுமியை வலுக்கட்டாயமான முறையில் வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் ஒருவாறு சிறுமியின் சகோதரனுக்குத் தெரியவரவே அவர் நடந்த விடயத்தைச் சித்திக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சித்தி காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய வன்புணர்வுக்குக் காரணமான நபர் நேற்றைய தினம்(08) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.