யாழ்.நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற மின்சாரம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற மின்சாரம்...

நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு துரித கதியில் புதிய மின்பிறப்பாக்கி பெற்றுத்தந்து  தடையற்ற மின்சார சேவைக்க வழிவகை செய்து கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெடுந்தீவு மக்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

முன்பதாக மின்பிறப்பாக்கிகளின் அடிக்கடி ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக நெடுந்தீவு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்களால் தாம் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடுவதாக 

தெரிவித்தும் அதற்கான தீர்வை வழங்குமாறும் கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது

இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்ட அமைச்சர் நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

அமைச்சரது தொடர் முயற்சிகள் காரணமாக கடந்தவாரம் கடற்படையினரது உதவியுடன் பாரிய மின்பிறப்பாக்கி ஒன்று கொழும்பிலிருந்து சுன்னாகம் பிரதான மின்சார நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டிருந்தது.

இந்நிலையில்  நேற்றையதினம்  குறித்த மின் பிறப்பாக்கி கடற்படையினரது உதவியுடன் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில் இன்று நெடுந்தீவு மின்சார நிலையத்தில் பொருத்தப்பட்டு நெடுந்தீவின் பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 

இதையடுத்து இன்றையதினம் குறித்த மின்பிறப்பாக்கி மூலமாக நெடுந்தீவுக்கான மின்சார சேவை சீரான முறையில் முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

இதேநேரம் புதிய மின்பிறப்பாக்கியை நெடுந்தீவுக்கு துரித கதியில் பெற்றுக்கொடுத்து தடையற்ற மின்சார வழங்கலை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெடுந்தீவு மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு