யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (08) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை-08 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.குடாநாட்டின் ஆறுகால்மடம், பழம் வீதி, காக்கைதீவு, வதிரி, சக்களாவத்தை, துலாக்கட்டு, அல்வாய், திக்கம், இரும்பு மதவடி, கோம்பையன் மானிப்பாய் வீதி, புது வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.