யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை (07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் ஆனைக்கோட்டைச் சந்தி, ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை VC, கூளாவடி வீதி, ஆனைக்கோட்டை நவாலி வீதி, மூத்தவிநாயகர் கோவிலடி, குளப்பிட்டி ஆனைக்கோட்டை வீதி, வராகி கோவிலடி, உயரப்புலம், சாவற்கட்டு, நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், கலையரசி வீதி, அரசடி, வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, கொத்துக் கட்டி, வலந்தலை, நடுத்தெரு, கசூரினா பீச், கருங்காலி, மருதபுரம், ஆலடி, காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடி, காக்கைதீவு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு