யாழ்.சுன்னாகத்தில் திறந்து வைக்கப்பட்ட இலத்திரனியல் நூல் நிலையம்

ஆசிரியர் - Admin
யாழ்.சுன்னாகத்தில் திறந்து வைக்கப்பட்ட இலத்திரனியல் நூல் நிலையம்

யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடிப் இலத்திரனியல்( E -Library )நூல் நிலையம் இன்று புதன்கிழமை(04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

36 ஆவது தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த நூல்நிலையம் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல்-05 மணி முதல் யாழ்.சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தலைவரும், நல்லூர் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருமான இ.யுகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நாடா வெட்டி இலத்திரனியல் நூலகத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினருடன் வலி.வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் சொ.சபேசன், உடுவில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சி.அனுசன், ஐயனார் சனசமூக நிலையத் தலைவர் இ.யுகராஜ் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் , ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு