யாழில் நாளையும், நாளை மறுதினமும் மின்தடை

ஆசிரியர் - Admin
யாழில் நாளையும், நாளை மறுதினமும் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமையும்(05), நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும்(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,நாளை(05) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் அறுகுவெளி, தனங்கிளப்பு, நாவற்குழி கேரதீவு வீதி, தச்சன்தோப்பு, கோகிலாக்கண்டி, மறவன்புலவு ஆகிய பகுதிகளிலும்,

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் காரைநகர்ச் சிவகாமி அம்மன் கோவிலடியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு