யாழ்.மாவட்டத்தில் வெவ்வேறு வாள்வெட்டு சம்பவங்களில் காயமடைந்த இருவா் வைத்தியசாலையில்..
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் கொக்குவில் மேற்கு பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கே. சத்தியதாஸ் வயது 24 என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்த போது இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் முகம் முடி வந்த இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தனிப்பட்ட பகைதான் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதே போன்று நேற்று இரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிஸ் பகுதியில் குப்பிளான் தெற்கில் வசிக்கும் 15 வயதுடைய சி.சருயன் என்பவருக்கு வீடு புகுந்த முகமூடி அணிந்து வந்த 8 பேர் வாளால் வெட்டி கை கழுத்தில் காயமடைந்த நிலையில் தெள்ளிபழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலில் காயமடைந்த இச் சிறுவன் முன்னாள் ஆவா குழுவை சேர்ந்த ஒருவரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக பல்வேறு வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.