ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கைதடி பாலம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளது...
யப்பானிய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட கைதடி கொங்கறீட் பாலம் மக்கள் பாவனைக்காக இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பாலத்தில் நடந்த பொங்கல், பூஜை வழிபாடுகளுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினராலும் ஒப்பந்த நிறுவனத்தினரும் இணைந்து மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இதேவேளை 10 ஆம் திகதி பலாலிக்கு வரவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இப்பாலம் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது.
விசேடமாக இப் பாலத்துடன் அமைக்கப்பட்ட வீதியில் (Bicycle Lane) துவிச்சக்கரவண்டி பாதைக்கான சமிக்ஞை குறியீடுகள் அங்கு வரையப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இப்பாலத்துடான வீதியிலேயே முதல் முறையாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.