கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்களின் பக்தி!

ஆசிரியர் - Admin
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் அரசியல் பிரமுகர்களின் பக்தி!

ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் இராஐகோபுர பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலய இராஜகோபுர மஹா கும்பாபிஷேகத்தில் பெருந்திரளான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர்,மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகிய அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

மாவை சேனாதிராஜா சைவபாரம்பரிய நெறிமுறைகளுக்கமைய வேட்டி அணிந்து மேலாடை இன்றி பக்திப்பெருக்குடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று விஜயகலா மகேஸ்வரனும் சேலை அணிந்து இராஜகோபுர மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

குறித்த இருவரும் பாதுகாப்பு இன்றி அடியவர்களுடன் அடியவர்களாக எளிமையுடன் பங்கேற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு