பிரதேச சபை உப தவிசாளரின் மோட்டார் சைக்கிளுடன் ஆவா குழு முக்கிய உறுப்பினர்கள் இருவர் கைது!

ஆசிரியர் - Admin
பிரதேச சபை உப தவிசாளரின் மோட்டார் சைக்கிளுடன் ஆவா குழு முக்கிய உறுப்பினர்கள் இருவர் கைது!

ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்ற தனுரொக்கின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை மானிப்பாய் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நபர் நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரின் சகோதரனான, ஆவா குழுவின் மூத்த உறுப்பினர் தம்பன் என அழைக்கப்படும் திவாகரன் என தெரிய வருகிறது.

மற்றைய நபர் பற்றிய தொடர்பான தகவல்களை பொலிசார் இது வரை வெளியிடவில்லை. அதே நேரம் உபதவிசாளரின் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு