யாழில் உணவு உண்பதை தவிர்த்த இளம் யுவதி மரணம்!

ஆசிரியர் - Admin
யாழில் உணவு உண்பதை தவிர்த்த இளம் யுவதி மரணம்!

உணவு உண்பதை தவிர்த்து வந்த இளம் யுவதி ஒருவர் அவரது வீட்டு வளவில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சுன்னாகம் ஈவினை மத்தியை சேர்ந்த செல்வநாயகம் சுகாயினி (வயது36) என்ற யுவதியே  மேற்படி பரிதாபமாக உயிரிழந்தவராவார் குறித்த யுவதியின் தாய் 

தந்தை இறந்த பின்னர் சிறிய தாயுடன் வசித்து வந்துள்ளார். 

சிறியதாய் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இந்த யுவதி தனது தந்தையார் இறந்த பின்னபு மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் உணவு உண்பதையும் குறைத்து வந்துள்ளார். 

தந்தை இறந்த பின்னர் சிறிய தாயுடன் வசித்து வந்துள்ளார். சிறியதாய் ஆசிரியராக கடமையாற்றுகிறார். இந்த யுவதி தனது தந் தையார் இறந்த பின்பு மிகவும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததுடன் உணவு உண்ப தையும் குறைத்து வந்துள்ளார். 

நேற்று முன்தினம் மாலை வீட்டின் வள வில் குறித்த யுவதி முகம் குப்பற விழுந்து கிட ந்ததுடன், உடல் முழுவதும் எறும்பு ஈக்கள் மொய்த்த நிலையில் உயிரிழந்து காணப்ப ட்டுள்ளார்.

பாடசாலையால் வந்த சிறியதாய் யுவதி நிலத்தில் கிடப்பதை கண்டதும் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். சடலம் பிரேத பரிசோதனை யின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த யுவதியின் சடலம் மிக வும் மெலிவடைந்து பரிதாபமானதாகவும் காணப்பட்டமை அனைவரையும் அதிர்ச்சி க்குள்ளாக்கியிருந்தது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத் தியசாலையின் திடீர் மரண விசாரணை அதி காரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண் டிருந்தார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு