இரவு உணவருந்திவிட்டு படுத்துறங்கிய இளைஞன் உயிாிழப்பு மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை..

ஆசிரியர் - Editor I
இரவு உணவருந்திவிட்டு படுத்துறங்கிய இளைஞன் உயிாிழப்பு மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை..

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவின் பின்பு  படுத்துறங்கியவேளையில் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த உரும்பிராய் இளைஞனின் உடற்கூறுகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 20 வயதான அகிலகுமார் - நிலவன் என்னும் முச்சக்கர வண்டிச் சாரதியே  இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்குகொண்ட நிலையில் வீடுதிரும்பி இரவு படுத்துறங்கச் சென்றுள்ளார் . அச்சமயம் குறித்த இளைஞருக்கு மூச்சுத் திணறல் அவதியுற்றதனையடுத்து உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டார். 

இருப்பினும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் உடலம் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 

குறித்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் மரணித்திற்கான உறுதியான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக உடற்கூறுகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு