கடுமையான வயிற்று வலி மற்றம் வாந்தியினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் உயிாிழப்பு..
வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியவற்றினால் அவதியுற்ற 6 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபகரமாக உயிரிழந்தான். பன்னாகத்தைச் சேர்ந்த தரம் 1ல் கல்வி கற்கும் பத்மநாபன் - சபி என்னும் சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவனாவான்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
24ம் திகதி மாலையில் அயலில் விளையாடிய சிறுவன் வீடு திரும்பியுள்ளான். அவ்வாறு வீடு திரும்பிய சிறுவன் வயிற்றுப்பகுதி வலிப்பதாக கூறியுள்ளான். குறித்த சமயம் வாந்தியும் எடுத்துள்ளான்.
இதனால் குறித்த சிறுவனிற்கு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இருப்பினும் நேற்று முன்தினம் காலையும் சிறுவன் வயிறு வலிப்பதாக தெரிவித்து வாந்தி ஏற்பட்ட நிலையில் சங்கானை வைத்தியசாலையில் பகல் 11 மணியளவில் அனுமதித்துள்ளனர்.
அவ்வாறு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி மதியம் 2.30 மணியளவில் உயிரிழந்தான்.
குறித்த மரணம் தொடர்பான மரணவிசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதோடு உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ஒப்படைக்கக்பட்டது.