நிலவை முத்தமிட்டது சந்திரயான்-3 -சாதித்து காட்டியது இந்தியா-

ஆசிரியர் - Editor II
நிலவை முத்தமிட்டது சந்திரயான்-3 -சாதித்து காட்டியது இந்தியா-

சற்று முன் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கியது சந்திரயன்-3

இலங்கை நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-3 தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துக்கொள்ள இஸ்ரோ தனது Youtube பக்கத்தில் நேரலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.   

இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஓகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று முன் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு