யாழின் முக்கிய வீதிகள் உட்படப் பல பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழின் முக்கிய வீதிகள் உட்படப் பல பகுதிகளில் நாளை மின்தடை

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை(27) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை- 08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் முக்கிய வீதிகளான பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் வீதியிலிருந்து புகையிரதக் கடவை வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து வின்சர் சந்தி வரை, கே.கே. எஸ் வீதியில் முட்டாசுக்கடைச் சந்தியிலிருந்து நாச்சிமார் கோவில் வரை, நாவலர் வீதி, சிவன்- பண்ணை வீதி, மானிப்பாய் வீதி, சிவலிங்கப் புளியடி, ஓட்டுமடம் வீதி, பிரப்பன்குளம் லேன், மணிக்கூட்டு ஒழுங்கை, யாழ். வீதி, சீனியர் ஒழுங்கை, நீராவியடி, கன்னாதிட்டி, ஹரிகரன் பிறிண்டேர்ஸ், பல்கலைக்கழக கல்லூரி, பல்கலைக்கழக விடுதி, சிறுநதியா நகை மாளிகை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு