நத்தியின் கைலாசாவின் பிரதமராக பதவியேற்ற ரஞ்சிதா

ஆசிரியர் - Editor II
நத்தியின் கைலாசாவின் பிரதமராக பதவியேற்ற ரஞ்சிதா

கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரு முறை கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அது குறித்து கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார்.

அதன் பின் சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி கடவுச்சீட்டு, தனி ரூபாய் நோட்டுகளும் தயாரிக்கப்பட்டன.

நித்தியானந்தா நேரலை நிகழ்ச்சிகள் மூலமாக தோன்றி அவரது பின் தொடர்பவர்களுக்கு சொற்பொழிவுகள் ஆற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைலாசாவின் இணையதள பக்கத்தில் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு அதில் அவரது பெயர் நித்யானந்தா மாயி சுவாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது இந்த பெயருக்கு கீழ் கைலாசாவின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படமும், நடிகை ரஞ்சிதா பிரதமரானார் என்ற செய்தியும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக நித்தியானந்தாவின் பெயர் சர்ச்சையில் சிக்கியபோது நடிகை ரஞ்சிதா பெயரும் உடன் வந்தது. நித்தியானந்தாவுடன் இவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகின.

இருப்பினும் அவற்றை இருவருமே மறுத்த நிலையில் நித்தியானந்தா நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ரஞ்சிதா தொடர்ந்து பங்கேற்றுவந்தார். நீண்ட நாட்களாக நித்தியானந்தாவின் சிஷ்யையாகவே ரஞ்சிதா இருந்துவருவதால், அவருக்கு கைலாசா நாட்டின் பிரதமர் பதவியை வழங்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைலாசா என்ற நாடே உண்மையா? இல்லையா? என்று விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ஒருவர் பிரதமர் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு