யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு!!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு!!

யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவரே மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , 

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்கு தெருவில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை  சடலமாக மீட்கப்பட்டார். 

இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், 

இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை பொலிஸாருக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு